வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி!!

390

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு குறைந்த பட்ச மாத சம்பளமாக 450 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது வரையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் குறைந்த பட்ச அடிப்படை மாதாந்த சம்பளம் 350 அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டுள்ளது.

எனினும் அதனை 450 டொலர்களாக உயர்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன் படி இனி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு 450 டொலர்களுக்கு அதிகமான மாதாந்த சம்பளம் கிடைக்கப்பெறுமாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகளை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளன.

இதனால் இவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காக ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.