மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் : ஹட்டனில் சம்பவம்!!(படங்கள்)

213

 
ஹட்டனில் இரண்டு ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார மண்டபத்தில் திருமண நிகழ்வென்று இடம்பெற்ற நிலையில், அவ்விடத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியொருவர் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வருகைதந்த மற்றுமொறு ஐஸ்கிரீம் வியாபாரியும் விற்பனைியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் இருவருக்குமிடையில் சண்டை மூண்டுள்ள நிலையில், ஒருவர் மண்டபத்தின் படியிலிருந்து கீழே விழுந்தவாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் – சமலனகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய எஸ்.தங்காராஜா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மற்றைய ஐஸ்கிரீம் வியாபாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதுடன், சடலம் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.