கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது!!

461

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் ருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி இந்த விருது வழங்கிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Harithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.