கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த நபர் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

507

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள West Sussex நகரில் மரினா ஆடம்ஸ்(44) என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், இணையத்தளம் மூலமாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர்(39) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

பின்னர், இருவரும் நேரடியாக சந்திக்க எண்ணி அலெக்ஸாண்டர் சட்டவிரோதமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதுமட்டுமில்லாமல், இருவரும் ஒரே அறையில் தங்கி வந்ததால் மரினா கர்ப்பம் அடைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலனின் ஆசைக்கு மரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் மரினா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஓர் நாள் மரினாவை அடைய நினைத்த அலெக்ஸாண்டர் அவர் மிரட்டி பார்த்துள்ளார். ஆனால், மரினா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, ‘நான் அடையாவிட்டால், வேறு யாரும் உன்னை அடையக் கூடாது’ என மிரட்டிய அலெக்ஸாண்டர் மரினாவை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான்.

இச்சம்பவம் வெளியானதை தொடர்ந்து அலெக்ஸாண்டரை பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அலெக்ஸாண்டருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், அவரை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.