கணவனால் 3 மாதங்களாக வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு!!

449

jail

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் கணவனால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மூன்று மாதங்களாக இரகசியமான முறையில் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கணவனால் தாக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக இரகசியமான முறையில் நாட்டு வைத்தியம் செய்துகொண்டு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவராவார். முதலாவது திருமணத்தின் மூலம் ஐந்து வயதுப் பிள்ளையும்ம் தற்போதைய கணவன் மூலம் 11 மாதக் கைகுழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இப்பெண்ணின் வலது கை கடுமையாகப் பாதிக்கப்பட்டள்ளதாகவும் கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கணவன் மஹியங்கனைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.