வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்துவைப்பு!!

330

 
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் நேற்று (06.02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறைக் கட்டிடத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்துவைத்தார்.

வவுனியா வடக்கு வலயத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் குறித்த பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடவசதி போதாத நிலையில் மாகாண கல்வி அமைச்சால் இக் கட்டிடம் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபர் திருமதி க.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, செ.மயூரன், வவுனியா வடக்கு வலயக் கலவிப் பணிப்பாளர் திரு.சிறிஸ்கந்தராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, குறித்த பாடசாலைக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நிதியின் கீழ் பல்லூடக எறிகை (புறஜெக்ரர்) ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.