பெண்ணாக மாற ஆசைப்பட்டு வைத்தியரை நாடிய காலியைச் சேர்ந்த 28 வயது இளைஞர்!!

585

காலி பிரதேசத்திலுள்ள 28 வயதான ஆண் ஒருவர் பெண்ணாக மாற ஆசைப்பட்டு, அதற்காக பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்கொள்வ தற்காக உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியரிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்­கொள்ளும் பொருட்டு குறித்த நபர் விசேட வைத்­திய நிபுணர் கொல்வின் குண­ரத்­ன­விடம் ஆலோ­ச­னை­களை கேட்­டுள்ளார்.

அதன்­போது, முறை­யற்ற விதத்தில் குறித்த ஓமோன் வில்­லை­களை உட்­கொள்ள வேண்டாம் என அவ்வைத்­தியர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் மன­நல நிபுணர் ரவீன் ஹங்வெல்லவை சந்­திப்­ப­தற்கு நாளொன்றை ஒதுக்கிக் கொள்­வது இதற்கு மிக சிறந்த தீர்­வாகும் என ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்த மன­நி­லையின் கார­ண­மாக பெண்கள் ஆடை­களை அணிந்து கொள்ள­வி­ரும்­பினால், அதனை தங்­க­ளு­டைய அறை­யுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும் என மேலும் அந்­ந­ப­ருக்கு வைத்­திய நிபுணர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இவ்­வாறு பெண்கள் ஆடை­களை அணிந்து கொள்ள விரும்­பு­வ­தனை அறை­யுடன் மட்­டுப்­ப­டுத்­து­மாறு கூறி­வ­தற்­கான காரணம், சமூகம் மற்றும் பாது­காப்பு பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து ஏற்­படும் கெடு­பி­டி­களை நீக்கி கொள்­ள­வ­தற்­கே­யாகும் என அவ்­வைத்­தியர் மேலும் தெரி­வித்­துள்ளார்.