கனடாவில் பிறந்து சில நிமிடங்களே ஆன 6 பச்சிளம் குழந்தைகளை தாயார் கொலை செய்துள்ளது தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் Andrea Giesbrecht என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர் 6 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 6 முறையும் இவர் ஒருமுறைக் கூட மருத்துவரை சந்திக்கவில்லை.
ஒவ்வொரு முறை குழந்த பிறந்தபோதும், சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தையை தூக்கிச்சென்று பொருட்களை அடைத்து வைக்கும் லாக்கரில் வைத்து பூட்டியுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து 6 பிரசவங்களில் பிறந்த 6 குழந்தைகளையும் லாக்கரில் போட்டு மூடியுள்ளார்.
கனடா நாட்டின் U-Haul நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாக்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டபோது அதன் உள்ளே குழந்தைகளின் உடல் உறுப்புகள் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்விவகாரத்தை தொடர்ந்து தாயாரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். எனினும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
தாயார் குழந்தைகளை லாக்கரில் வைத்து பூட்டி கொன்றாரா? அல்லது குழந்தைகள் இறந்தே பிறந்ததா? என்பது மர்மமாக நீடித்து வந்துள்ளது.
மருத்துவ துறையின் பல்வேறுக் கட்ட சோதனைகளில் 6 குழந்தைகளும் உயிருடன் பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் பிறந்ததும் அவற்றை தாயார் தான் லாக்கரில் போட்டு கொலை செய்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தையின் உடலை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் என்ற மதிப்பீட்டில் ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் வரை தாயாருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






