யாழில் தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது : நீதிபதி இளஞ்செழியன்!!

473

யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது உரு­வெ­டுத்­துள்ள புதிய வாள்­வெட்டு கலா­சா­ர­மா­னது நீதி­மன்­றங்­க­ளுக்கும் நீதி­மன்­றங்­களின் தண்­ட­னை­க­ளுக்கும் சவா­லாக அமைந்­துள்ள நிலையில் இத்­த­கைய சமூக விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக தண்­ட­னை­களை வழங்­கு­வதன் மூலமே இவற்றைக் கட்­டு­ப­டுத்த முடியும் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதி­மன்­றங்­களால் வழங்­கப்­படும் பிணை­க­ளா­னது சமூ­கத்தின் பாது­காப்பை கருத்தில் கொண்டே இது­வரை யாழ்.மேல் நீதி­மன்றால் வழங்­கப்­பட்டு வந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்பு யாழ்.மாந­கர சபை எல்­லைக்குள் கைக்­குண்டு ஒன்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டி கைது செய்­யப்­பட்டு நீதிவான் நீதி­மன்றால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஒருவருக்கு பிணை வழங்கக் கோரி அவர் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் யாழ்.மேல் நீதி­மன்றில் முன்­வைக்கப்­பட்ட பிணை விண்­ணப்­பத்தின் போதே அவர் மேற்­கண்ட விட­யத்தை கூறி பிணையை நிராக­ரித்­தி­ருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித் அவர், தென்­னிந்­திய சினிமா பாணி­யி­லான வாள்­வெட்டுக் குழு மோதல் கலா­சா­ர­மா­னது யாழ்ப்­பா­ணத்தில் உரு­வெ­டுத்து யாழ்ப்­பா­ணத்து இளை­ஞர்­களை சீர­ழித்து வருகின்றது.

கடந்த ஒன்­பது மாத கால­மாக கட்­டு­பாட்­டுக்குள் வைக்­கப்­பட்­டி­ருந்த வாள்­வெட்டு குழு மோதல் கலா­சாரம் இவ்­வ­ரு­டத்தின் தை மாதத்தின் இறுதி பகு­தியில் மீண்டும் புதி­ய­தொரு குழுவால் முன்னெடுக்கப்­பட்­டுள்­ளது.

இன்­றைய யாழ்ப்­பா­ணத்தின் நிலை­யா­னது தெற்கு அர­சியல் மட்­டத்தில் கூட யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் அள­வுக்கு மோச­மா­ன­தா­கவும் கேள்விக்குறியாகவும் உள்­ளது.

இந்­நி­லையில் இத்­த­கைய குற்றச் செய்­ல­களை கட்­டு­ப­டுத்த வேண்­டு­மாயின் நீதி­மன்­றங்கள் இக் குற்றங்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

பிணை கோருவது என்பது எதிரியின் உரிமையாக இருப்பினும் அவ் பிணையை வழங்குவதில் நீதிமன்றமானது சமூக அக்கறையை பிரதானமாக கருத்திலெடுத்தே பிணையை வழங்கும் என்றார்.