வவுனியா உளுக்குளம், அலியாப்பிட்டடிய சந்திப் பகுதியில் நேற்று (07.02.2017) அதிகாலை 1 மணியளவில் புதையல் தோண்டிய நால்வரை ஈரப்பெரியகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது 38, 42, 59, 44 வயதுடைய ஆண்கள் எனவும் இவர்களிட்மிருந்து கார் ஒன்றும் நிலத்தில் புதையல் கண்டுபிடிக்கும் ஸ்கானர் சாதனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.