வவுனியாவில் மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள்,மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

582

 
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவபீட மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2017) பிற்கபல் 1 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று கண்டிவீதியில் நின்று மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு மீண்டும் மத்திய பேருந்து நிலையம் ஊடாக நீதிமன்ற வீதிவழியாக வைத்தியசாலையினைச் சென்றடைந்தனர்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? போலி சைட்டம் வைத்தியர்கள் மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் இதயம் இலங்கை மருத்துவக் கல்லூரியைக் காப்போம், போலி பட்டம் விற்கும் சைட்டத்தினைமூடு போன்ற வாசங்களை தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.