வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் செய்த வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் தாக்குதல்!!

786

 
வவுனியாவில் நடைபாதையில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனது வியாபார நிலையத்திற்கு முன்னால் நின்று வியாபாரம் மேற்கொள்ளவேண்டாம் என்று தெரிவித்து வயோதிபரை தள்ளியதுடன் கையில் வைத்திருந்து வியாபாரம் மேற்கொள்ளும் வெற்றிலை, வெற்றிலை சுருள் என்பனவற்றையும் வீதியில் வீசியுள்ளார்.

இச் சம்பவம் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று (08.02.2017) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.