பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்!!

578

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஊரே பற்றி எரியும்போது முதல்வர் பன்னீர் செல்வம் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனால், அவரை மிக்சர் பன்னீர் செல்வம் என கிண்டல் செய்து மீம்ஸ்களை இளைஞர்கள் வெளியிட்டனர். இப்படி அமைதியாக இருந்த பன்னீர் செல்வம், திடீரென அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியது இளைஞர்கள் மத்தியில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதுவும், மெரினாவில் வைத்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்துள்ளது, அவரை குறித்து வெளியிட்ட மீம்ஸ்க்காக தமிழக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.