சிரியாவில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டு கொலை?

563

சிரிய சிறைச்­சா­லையில் 13 000 பேர் தூக்­கி­லிட்டுக் கொலை செய்ய்­யப்­பட்­ட­தாக சர்­வ­தேச மன்­னிப்பு சபை­யின் குற்­றச்­சாட்டை சிரியா மறுத்­துள்­ளது.

சிரியா கடந்த 5 வரு­டங்­களில் சுமார் 13,000 சிறைக்­கை­தி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ளது என்ற சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் அறிக்­கையை சிரிய அரசு முற்­றி­லு­மாக மறுத்­துள்­ளது.

மேலும் சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் அறிக்கை முற்­றி­லு­மான பொய் எனவும், இது போன்ற குற்­றச்­சாட்­டுகள் சர்­வ­தேச அரங்கில் சிரி­யா­வுக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் சிரிய அரச தரப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் குறித்த அறிக்­கையில், சிரி­யாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஷாத்­துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையே உள்­நாட்டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது.

சிரி­யாவில் கடந்த 5 வரு­டங்­க­ளாக நடந்த உள்­நாட்டுப் போரில் ஜனா­தி­பதி அசாத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் என 13,000 பேருக்கு இர­க­சி­ய­மாக மரண தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், 1000 க்கும் மேற்­பட்டோர் சித்தி­ர­வதை செய்­யப்­பட்டு, உணவு அளிக்­கப்­ப­டாமல் கொல்லப்பட்டுள்­ளனர். இன்­ற­ளவும் அங்கு வாரந்­தோறும் 50 பேருக்கு மரண தண்­டனை நிறைவேற்றப்­பட்டு வரு­கி­றது என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சிரி­யாவைச் சேர்ந்த அரச படை வீரர்கள், நீதித்­துறை வட்­டா­ரங்­களில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாக அதன் தரப்பில் கூறப்பட்டிருந்தது.