வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள மயானத்தின் பாதை சீர் இன்றி காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனை புனரமைத்துத் தருமாறும் வீதிக்கு குறுக்கேயுள்ள கால்வாய் திறந்த நிலையில் காணப்படுவதால் அதனைக்கடந்தே செல்லவேண்டியுள்ளதால் பலசிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் வீதியும் செப்பனிடப்படாமல் குண்டும்குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்க்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.