வவுனியா தனியார் பேரூந்துகள் பணிப் புறக்கணிப்பில்!!

225

 
வவுனியாவில் இன்று (09.02.2017) தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முற்றுமுழுதான பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த (03.02.2017) அன்று இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை தங்களுக்கு வழங்கக்கோரி மாகாண ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்தபோது வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக அவரது கொடும்பாவியை எரித்தமையை கண்டித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பும் கண்டனப் பேரணியும் இடம்பெறுகிறது.

வட மாகாணம் தழுவிய இப் பணிப் பகிஸ்கரிப்பானது வவுனியாவிலிருந்து மற்றும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து செல்லும் தனியார்பேரூந்து உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்து கண்டனப்பேரணியை ஆரம்பிக்கவுள்ளனர்.

வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள தனியார் பேரூந்து நிலையத்திலிருந்து பதாதைகள் கட்டப்பட்ட பேரூந்துகள் இன்று காலையில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு செல்வதை காணக்கூடியதாக இருந்ததுடன் தனியார் பேரூந்து நிலையமானது வெறிச்சோடிக்காணப்பட்டது.