ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை : இறுதி ஒருநாள் போட்டி இன்று!!

450

தென்னாப்பிரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாபிரிக்கா கைப்பற்றி உள்ளது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை ரசிகர்கள் உள்ளனர்.