உயர்தரப்பரீட்சை விண்ணப்பங்கள் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது!!

461

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் நடவடிக்கைகள் இம்மாதம் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 15 ஆம் திகதிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.