இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்படுமிடத்து, அந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை குழாம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
15 பேர் கொண்ட இலங்கை அணி குழாத்துக்கு உபுல் தரங்க அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.






