தீர்வின்றி தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!!

408

 
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் பதினொராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

கேப்பாப்புலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களிற்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை இன்றும் அமைத்தியான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.