வவுனியாவில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களின் உரிமையாளர்கள் 11பேருக்கு எதிராக வழக்கு!!

930

 
வவுனியாவில் (02.02.2017) அன்று இரண்டாம் குறுக்குத் தெருவில் வவுனியா சுகாதார அலுவலக பொது சுகாதாரப்பணியாளர்கள், சிரேஷ்ட சுகாதார பணியாளர்கள் இணைந்து வியாபார நிலையங்கள், திணைக்களங்கள், வீடுகள் ஆகியவற்றில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது 11பேருக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றினால் ஆறு பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன் ஐந்து பேருக்கு மன்றினால் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசேதகர் மேஜெயா தெரிவித்தார்.