சிவனொளிபாதமலை சென்று திரும்பிய யாத்திரிகள் பயணித்த கார் கோர விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

222

 
மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா கிளன்டில் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி குண்டசாலை பிரதேத்தை சேர்ந்த 34 வயதுடைய சமிந்த சந்திரசேன என்ற கார் சாரதியே இவ்வாறு மரணமானார்.

சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் அம்பாறை நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த யாத்திரிகள் பயணித்த காரே 10.02.2017 இரவு 9.30 மணியளவில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.