நடிகை ரோஜா அதிரடியாக கைது!!

737

நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா விமானம் மூலம் விஜயவாடாவுக்கு வந்தார்.

அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய ஆந்திர பொலிசார் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனக் கூறி அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று விஜயவாடா பொலிஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.