ரயிலில் மோதி தாய் பலி : 12 வயது மகள் படுகாயம்!!

277

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று காலை பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய தாய் இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் 12 வயதுடைய மகள், கடுகண்ணாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதெனிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.