7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம், கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் ஹாசினியின் இறுதிச்சடங்கு!!

398

சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது.

சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன 7 வயது சிறுமி ஹாசினி, நான்கு நாட்கள் கழித்து எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 22 வயதான குற்றவாளி ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜஸ்வந்த்தை கைது செய்த போது பொதுமக்கள் அவனை சரமாரியாக தாக்கினர்.

மேலும், ஜஸ்வந்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர், பலர் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், மகளின் முகத்தை காண முடியாமல் தந்தை கதறும் காட்சி அனைவரது நெஞ்சத்தையும் உருக வைத்துள்ளது.

நாட்டில் இனியும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.