மலேசியாவில் நண்பனை அடித்துக் கொலை செய்த இலங்கையர் கைது!!

284

மலேசியாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதுடைய இலங்கையர் மற்றும் 30 வயதுடைய இந்தியர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் தங்களின் 49 வயதுடைய இலங்கை நண்பரை கல்லினால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சடலம் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக Kuala Muda தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அதாவது கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் உயிரிழந்த நபர் அவரது மனைவிக்கு காணொளி அழைப்பொன்று மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நண்பர்களும் ஒரு கான்கிரீட் கல்லை பயன்படுத்தி குறித்த நபரின் பின் தலையில் அடித்துள்ளனர். அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக Alor Setar பகுதியில் உள்ள Sultanah Bahiyah வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது