மனிதர்களிடம் உயிர் பிச்சையெடுத்த குட்டி சிம்பன்சி : நெகிழ வைக்கும் காட்சி!!

478

ஆபிரிக்க வீதியில் குட்டி சிம்பன்சி குரங்கு ஒன்று மனிதர்களிடம் உயிரை காப்பாற்ற கையேந்தி பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

காங்கோ பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குட்டி சிம்பன்சியின் தாயை கடத்தல்காரர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.

தாயை இழந்த குட்டி சிம்பன்சி, கழுத்தில் சங்கிலியுடன் பட்டினியால் வாடி உயிருக்கு போராடிய நிலையில் மக்களிடம் கையேந்தி பிச்சையெடுத்துள்ளது.

இதனை பார்த்த நபர் ஒருவர் அருகிலுள்ள விலங்குகள் மையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு மையத்தினர் சிம்பன்சியை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது Mado என பெயர் வைக்கப்பட்டுள்ள குட்டி சிம்பன்சி சிகிச்சை மூலம் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிறது.

குறித்த சிம்பன்சி தெருவில் உயிருக்காக மனிதர்களிடம் பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.