வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

262

 
வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (11.02.2017) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக இ.சண்முகலிங்கம் ( உதவிக்கல்விப் பணிப்பாளர் -அழகியல்) , கி.மங்களகுமார் ( உதவிக்கல்விப் பணிப்பாளர் – உடற்கல்வி) , கௌரவ விருந்தினராக ச.சுபாஸ்கரன் (புதுக்குளம் ம.வி அதிபர்) , விஜயரட்ன ( உதவி பொலிஸ் அதிகாரி ஈச்சங்குளம்) , து.ரவிச்சந்திரன் ( ஆசிரிய ஆலோசகர்- உடற்கல்வி) , பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன் பிரதம விருந்தினர் ப.சத்தியலிங்கம் வைபவ ரீதியாக போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

அணிவகுப்பு, உடற்பயிற்சி ,வினோதஉடை , பெற்றோர் நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி , உத்தியோகத்தர் நிகழ்ச்சி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.