வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் திறப்பு விழா!!

242

 
சனசமூக நிலைய 26ம் ஆண்டு விழாவும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்தமாக வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் நேற்றுமுன்தினம் (10.02.2017) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கௌரவ விருந்தினர்களாக சுகந்தினி கிசோர் ( செயலாளர்- வவுனியா தெற்கு பிரதேச சபை) , வாஜ்பா யுனைட்ராஜா (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) , செ.வேதநாதன் (கற்பகபுரம் பாடசாலை அதிபர்) , பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.