ஐ.பி.எல் அனுபவத்தை சம்பியன் லீக்கில் பயன்படுத்துவேன்: நரைன்!!

504

Sunil Narine

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றார்.

தவிர கடந்த 2012ல் 24 விக்கெட் வீழ்த்தி அணி சம்பியன் பட்டம் வெற்றிபெற கைகொடுத்தார். வரும் செப்டம்பர் 21ல் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கு கொல்கத்தா அணி தகுதி பெறவில்லை.
எனவே, மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ அணியில் விளையாடுகிறார்.

இது குறித்து நரைன் கூறுகையில் கொல்கத்தா அணிக்காக விளையாடியதன் மூலம், அதிகம் கற்றுக் கொண்டேன். இதை சம்பியன்ஸ் லீக் தொடரில் பயன்படுத்திக் கொள்வேன்.
தவிர, கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கெதிராக ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினேன். இந்த அனுபவத்தை கொண்டு பேத் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்வேன் என்றார்.