பஸ் ஒன்றில் திருடிய நபர் ஒருவர், பஸ்ஸிலிருந்து வெளியேற முற்பட்டபோது கதவை திடீரென மூடி அந்நபரை சிக்க வைத்த சாரதி, அந்த பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்ற சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
கொலம்பியவின் பொகோட்டா நகரில் பஸ் ஒன்றில் ஏறிய நபர், பயணி ஒருவரின் தொலைபேசியை திருடிக்கொண்டு பஸ்ஸிலிருந்து வெளியேறுவதை பஸ் சாரதி உணர்ந்தார்.
அப்போது விரைவாக சிந்தித்த மேற்படி சாரதி பஸ்ஸின் கதவுகளை வேகமாக மூடினார். இதனால், மேற்படி திருடன் கதவு இடுக்கில் சிக்கிக்கொண்டதால் அவன் தப்பிச் செல்ல வழியிருக்கவில்லை.
பின்னர் மேற்படி பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்குச் செலுத்திச் சென்ற சாரதி, திருடனை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
பஸ் சாரதியின் சமயோசித நடவடிக்கையை பொகோட்டா மாவட்ட பொலிஸ் ஆணையாளர் டியகோ வஸ்குவெஸ் வெவுகாவை பாராட்டியுள்ளார்.






