யாழில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!

231

எரி காயங்களுடன் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலம் இன்று மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியினை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டவர் 57 வயதுடைய ஸ்ரீகலா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைவாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.