இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத அணுகுண்டு : பொதுமக்கள் வௌியேற்றம்!!

237

கிரேக்க நாட்டில் தெசா லோகினி என்ற இடத்தில் கடந்த வாரம் சாலைப் பணிகள் நடைபெற்றது. அப்போது பூமிக்குள் வெடிக்காத அணுகுண்டு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

250 கிலோ வெடி மருந்து கொள்ளளவு கொண்ட அந்த அணுகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது.

அப்போது வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது தெரியவந்தது. அந்த குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

அதனால் தெசாலோனிகி நகர மக்களை கூண்டோடு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நகரில் 70 ஆயிரம் மக்கள் வகிக்கின்றனர். அணுகுண்டு புதைந்து கிடக்கும் 1.9 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் என 300 பேர் 20 நோயாளர் காவு வாகனங்களில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பொது மக்கள் வெளியேற்றும் பணியில் 1000 போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல நாட்களாக ரோந்து சுற்றி பொதுமக்கள் வெளியேறும் படி அறிவுறுத்தினார்.