ஜெயலலிதாவிற்கு எற்பட்ட நிலைதான் எனக்கும் : சசிகலா அதிரடி பேட்டி!!

286

அரசியலில் மாண்புமிகு இதயதெய்வம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க புறப்படும் முன் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறியதாவது,

ஒரு பெண் அரசியலில் இருப்பது என்பது மிகவும் கடினம். இதே நிலைதான் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களுக்கும் ஏற்பட்டது. அம்மாவை எதிர்த்த கூட்டம்தான் இப்போது நம்மை எதிக்கிறது .

இதுபோலவே எம்ஜிஆர் காலத்திலும் சிலர் வெளியேறினார்கள். அது போன்ற சதிகளை எல்லாம் தகர்த்து தான் அம்மா கட்சியை வளர்த்தார்கள்.

மிரட்டல் உருட்டல்களை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. எதிர்நீச்சல் போட்டுத்தான் கழகத்தை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளோம். நிச்சியமாக இதிலிருந்தும் நாம் மீண்டு வருவோம், நல்ல முடிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.