காலதாமதம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் : ஆளுநருக்கு சசிகலா கடிதம்!!

495

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம் வெளியாது. அதில், என்னால் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும், இனியும் காலதாமதம் செய்தால் எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா எழுதியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையகம் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொய்யானவை.

இது போன்று போலித்தகவல் பரப்பும் விஷமிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அதிமுக தலைக்கழகம் தெரிவித்துள்ளது.