காதலர் தினத்­துக்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து ரோஜா பூக்கள் : கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கைப்­பற்­றப்­பட்­டன!!

2092

காதலர் தினத்தை முன்­னிட்டு இந்­தி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­படும் ரோஜா பூக்கள் அடங்­கிய 4 பெட்­டிகள் விமான நிலைய சுங்கப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக சுங்­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

நான்கு பெட்­டி­களில் மொத்­த­மாக 53 கிலோ­கிராம் வாடாத ரோஜா பூக்கள் காணப்­பட்­டுள்­ளன. இவை பெத்­த­கான வீதி, கோட்டே என்ற முக­வ­ரி­யி­டப்­பட்ட நிலையில் வர்த்­த­க­ரொ­ரு­வரின் பெயரில் வரவழைக்­கப்­பட்­டுள்ள நிலையில் யூ.எல் 124 என்ற விமா­னத்தின் ஊடாக கடந்த 8 ஆம் திகதி இலங்கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ரோஜா பூக்­களை இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்­காக NPQS/CFL/206/053 என்ற பதி­வி­லக்­கத்தில் அனு­ம­திப்­பத்­தி­ர­மொன்று பெறப்­பட்­டி­ருந்த போதிலும், அப்­பத்­திரம் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டாமல், சட்­ட­வி­ரோ­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­த­மை­யினால் சுங்­கத்­தினர் அவற்­றினை கைப்பற்றியுள்ளனர்.

இந்­நி­லையில், சுங்­கத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட பூக்­களை விடு­விப்­ப­தற்­காக விமான நிலை­யத்­துக்கு சென்ற குறித்த வர்த்­தகர், பிர­பல அமைச்­ச­ரொ­ரு­வரின் உத்­த­ர­வுக்­க­மை­யவே இவை கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­த­தோடு சுங்க அதி­கா­ரி­களின் முன்­னி­லை­யி­லேயே குறித்த அமைச்­ச­ருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

எனினும் சுங்கத்தினர் அப்பூக்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுத்திராது தடுத்துவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.