நோய்தொற்று இருக்கும் ஜெயலலிதா எதற்காக தயிர்சாதம் சாப்பிட்டார் : பூதாகரமாய் வெடிக்கும் உண்மைகள்!!

366

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை தமிழகத்தில் நிலவி வருகின்ற நிலையில், நக்கீரன் நாளிதழின் பத்திரிகையாளர் கோபால் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாக்டர் பீலோ கூறிய தகவல்களின் பின்னணியில், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி அல்லது சசிகலா இருந்திருக்க வேண்டும்.

இதற்காக, அவருக்கு பலகோடி கொடுக்கப்பட்டுள்ளது. நாடகத்திற்கு ஒத்திகை பார்த்துவிட்டு மேடையில் நடிக்கும்போது சில நேரங்களில் சொதப்படும் ஏற்படும்.

அப்படிதான் டாக்டர் பீலேவும் சொதப்பியுள்ளார். கடுமையான நோய்தொற்று (septicemia) தீவிரமடைந்து இரத்தத்தில் கலந்துவிட்ட காரணத்தினால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவர் கூறினார்.

மேலும், அவரை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அப்படியிருக்கையில், ஒரு நாட்டை ஆளுகிற முதல்வர் எதற்காக இப்படி தனது உடல்நிலை குறித்து கண்டுகொள்ளவில்லை.

மேலும், அவர் தயிர்சாதம் சாப்பிட்டதாக கூறுகிறார் சசிகலா. நோய்தொற்று இருப்பவருக்கு எவ்வாறு தயிர்சாதம் சாப்பிடக்கொடுத்தார்கள்.

இவை அனைத்தும் பீலோ விட்ட பீலா என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

நடிகர் சோவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஜெயலலிதா சென்று பார்த்தார்கள். இந்த வீடியோ வெளியானது. எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவர் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகங்கள் எழுந்தன.

இந்த சந்தேகத்தி போக்குவதற்காக, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டார்கள். இப்படி எம்ஜிஆர் செய்திருக்கும்போது, ஜெயலலிதாவை புகைப்படம் எடுப்பதற்கு ஏன் மறுத்துவிட்டார்கள்.

ஜெயலலிதாவை ஐசியூவில் உள்ள துகளின் வழியாக ஆளுநர் பார்த்ததாக டாக்டர் பாலாஜி கூறினார். இது எவ்வளவு பெரிய பொய்.

ரெட்டியை பார்த்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் மருத்துவர் பாலாஜியோ ஐசியூவின் துகள் வழியாக ஆளுநர் பார்த்தாக பொய் கூறுகிறார் என்று நக்கீரன் தெரிவித்துள்ளார்