மனிதனின் வெறி உணர்வை நாயிடம் கொண்டு சேர்த்த கொடூரம்!!

736

நாய்களின் இனப்பெருக்க வல்லமையை நிரூபிப்பதற்காக, வேற்று இன நாய்களுடன் இரத்தம் சொட்டும் நிலையில் கடுமையாக மோதவிடும் நிகழ்வு கசகஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

‘வலிமையை நிரூபிப்பதற்கான நாய்களின் சண்டை’ எனும் தொனிப்பொருளில் கசகஸ்தானின் தலைநகர் பிஸ்கெக்கீல் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த நாய் சண்டையை மேற்கொள்வதற்காக சுமார் 17 உரிமையாளர்கள், தமது நாய்களை அழைத்து வந்துள்ளதோடு அவற்றின் வெறியை ஏனைய நாய்கள் மீது காட்டி, உச்சக்கட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்கு, அவை தூண்டுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

குறித்த நாய் சண்டை நிகழ்வானது சீனாவிலிருந்து, கசகஸ்தான் பிரதியிட்டதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் கசகஸ்தான் போட்டி ஏற்பாட்டாளர்கள், குறித்த போட்டியானது நாய்களின் வெறியை தூண்டுவதற்கான நிகழ்வன்று, அவற்றின் இன விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் சிகிச்சை முறை என வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.