பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 32 பேர் உடல் கருகி பலி!!

273

தாய்வானில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேர் தைபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தைவான் தலைநகர் தைபே அருகே ஒரு சுற்றுலா பஸ்சென்று கொண்டிருந்தது. அதில் 44 பேர் பயணம் செய்தனர். அதிவேகமாக வந்த பஸ் வீதியின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

அப்போது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதில் இருந்து கரும்புகையுடன் தீ எரிந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் 30 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். இருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 32 ஆனது.

பலியானவர்களில் 20 முதல் 60 வயது உடையவர்கள் அடங்குவர். அவர்கள் அனைவரும் தாய்வானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.