கோர விபத்து : 5 பேர் வைத்தியசாலையில்!!

242

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, படுகாயமடைந்த 19 வயது இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.