15 வயது பாடசாலை மாணவி ஏழு மாதக் கர்ப்பமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அச்சிறுமியின் தாயின் சட்டரீதியற்ற கணவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நிக்கவெரட்டி நீதிவான் திருமதி காஞ்சனா டி.சில்வா உத்தரவிட்டுள்ளார்.
நிக்கவெரட்டிய ரம்பபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த ஏழு மாதங்களாக தாயின் சட்டரீதியற்ற கணவரே சிறுமியுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும் சந்தேக நபரான சிறிய தந்தையின் வேண்டுகோளில் இச்சம்பவத்தை தாயிடம் சிறுமிமறைத்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சிறுமியின் சிறிய வயதிலேயே தந்தை அவர்களை விட்டுச் சென்றுள்ளதால் அதன் பின்னர் தாய் சட்டரீதியற்ற கணவர் ஒருவருடன் வாழ்ந்து வருவதுடன் அத்தாய்க்கு தற்போது ஏழு வயதில் மற்றொரு பிள்ளையும் உள்ளதாகவும் தாய் வீட்டில் இல்லாத நேரம் இச்சிறுமி தனது சிறிய தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.