15 வயதான மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் விளக்கமறியலில்!!

656

15 வயது பாட­சாலை மாணவி ஏழு மாதக் கர்ப்­ப­மான சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட அச்­சி­று­மியின் தாயின் சட்­ட­ரீ­தி­யற்ற கண­வரை இம்­மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நிக்­க­வெ­ரட்டி நீதிவான் திரு­மதி காஞ்­சனா டி.சில்வா உத்­த­ர­விட்­டுள்ளார்.

நிக்­க­வெ­ரட்­டிய ரம்­ப­பொக்­குன பிர­தே­சத்தைச் சேர்ந்த 33 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட சிறுமி பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­தே­ச­வா­சிகள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது கடந்த ஏழு மாதங்­க­ளாக தாயின் சட்­ட­ரீ­தி­யற்ற கண­வரே சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யுள்­ள­தா­கவும் சந்­தேக நப­ரான சிறிய தந்­தையின் வேண்­டு­கோளில் இச்­சம்­ப­வத்தை தாயிடம் சிறு­மி­ம­றைத்­த­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

சிறு­மியின் சிறிய வய­தி­லேயே தந்தை அவர்­களை விட்டுச் சென்­றுள்­ளதால் அதன் பின்னர் தாய் சட்­ட­ரீ­தி­யற்ற கணவர் ஒரு­வ­ருடன் வாழ்ந்து வரு­வ­துடன் அத்­தாய்க்கு தற்­போது ஏழு வயதில் மற்­றொரு பிள்­ளையும் உள்­ள­தா­கவும் தாய் வீட்டில் இல்லாத நேரம் இச்சிறுமி தனது சிறிய தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.