சிறைக்கு செல்லும் முன் சசிகலா செய்யப் போகும் முதல் விடயம் இது தான்!!

472

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனால் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பில் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா இரவு 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அதன் பின் அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கும் படி பேட்டி கொடுத்தார்.

இதனால் அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற அவர், இன்று முதலில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார்.

அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.