வவுனியாவில் பொறியியல் பீட மாணவர்களுக்கு பொலிஸாரால் ஜீப் வண்டி வழங்கி வைப்பு!!

237

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பொறியியல் பீட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் ஜீப் வண்டி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பொறியியல் பீடத்தில் கற்கும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வாகனம் ஒன்று இல்லாது பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் பணிப்புக்கமைய வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக் கோனினால் ஜீப் வண்டி கையளிக்கப்பட்டது.

இயங்கு நிலையில் உள்ள இவ் ஜீப் வண்டியின் தற்போதைய பெறுமதி சுமார் 6 இலட்சம் ஆகும்.