சிறையில் அடைக்கப்பட்டனர் சசிகலா மற்றும் இளவரசி : அரை மணிநேரத்தில் சுதாகரனும் சரண்!!

291

சசிகலா, அளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சரணடைவதற்கான கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் உடனடியாக நீதிமன்றில் சரணடைய நீதிமன்றம் சசிகலாவுக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து இன்று காலை சசிகலா மற்றும் இளவரசி போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் மாலை 5.20 மணியளவில் இருவரும் சரணடைந்தனர். நீதிமன்றில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா மற்றும் இளவரசி சரணடைந்தார்.

ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரையும், இளவரசியையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கும் சிறையில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

உயரம், எடை, ரத்த கொதிப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவு, இதய துடிப்பு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி கெடு விதித்த அரை மணிநேரத்தில் சுதாகரனும் நீதிமன்றில் சரணடைந்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் சரணடைந்து பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சுதாகரன் சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சுதாகரனுக்கு உடல்நலக் குறைவு என்பதால் இன்று சரணடையவில்லை. நாளை நீதிமன்றத்தில் சரணடைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து சுதாகரன் சரணடைய அரை மணிநேரம் கெடுவிதித்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தார்.

அவரும் உரிய சோதனைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.