கொடூர பசியில் இருந்த சிங்கத்தின் அருகில் நின்ற பெண்ணுக்கு நடந்த விபரீத சம்பவம்!!

275

சிம்பாவேயில் கொடூர பசியில் இருந்த சிங்கத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்த பெண்ணை அச்சிங்கம் கடித்து குதறியதில், பயங்கரமாக காயமடைந்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பாவேயில் அமைந்துள்ள Eco Game என்ற பூங்காவிற்கு Ngoni Hera என்ற பெண், தனது காதலனுடன் சென்றுள்ளார்.

பூங்காவில் நின்று விதவிதமான புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அவர், அங்கிருந்த சிங்கத்தின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால், அந்த சிங்கமானது கொடூர பசியில் இருந்தது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில், சிங்கத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த இவரை அவரது காதலன் புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, கொடூர பசியில் இருந்த சிங்கம், அப்பெண்ணை கோபத்துடன் பாய்ந்து கடித்துள்ளது. இதனால் அப்பெண்ணின் தொடைப்பகுதியில் உள்ள சதை தனியாக வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் காதலன் அவரை மருத்துவனையில் அனுமதித்துள்ளார். அப்பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.