இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை!!

214

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.