உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்றை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை – செனரத்கம பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், வரக்காபொல பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பஸ்யால பகுதியில் தொழில் செய்து வரும் குறித்த இளைஞர், கடந்த 9ஆம் திகதி வீடு செல்வதாக தெரிவித்து பஸ்யாலையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
எனினும், மறுநாள் காலை வரக்காபொல பகுதியில் இருந்து குறித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞரின் படுகொலைக்கு நீதிகோரி இளைஞனின் சடலத்தை கண்டி- குருநாகல் பிரதான வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.