கந்தான – நாகொட பகுதியில் கார் ஒன்றை இயக்க முற்பட்ட வேளை காரின் சாரதி தடுப்புக்கு பதிலாக வேக அதிகரிப்பு பகுதியை அழுத்தியதால் காருக்கு முன் நின்ற ஒருவர் அதில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த காரின் சாரதியாக பெண் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
காருக்கு முன் நின்ற பெண்ணின் தந்தையே காரில் மோதுண்டு ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து 27 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.