திருஷ்­டியை நீக்குவதாக கூறி பெண்ணை நிர்­வா­ணப்­ப­டுத்தி துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு முயற்­சித்த பூசகர்!!

401

குழந்தைப் பாக்­கி­யத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக நாகொல்­லா­கொட பிர­தே­சத்தில் தேவா­லயம் ஒன்­றுக்குச் சென்ற பெண் ஒருவரை அந்த தேவா­ல­யத்­தினுள் நிர்­வா­ண­மாக்கி வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்த முயன்­ற­தாகச் கூறப்­படும் தேவா­லய பூசகர் ஒருவர் பிங்­கி­ரிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு ஹெட்­டி­பொல பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த பெண் ஹல்­மில்­லேவ பிர­தேச வீடொன்றில் இடம்­பெற்ற பூஜை ஒன்றில் சந்­தேக நப­ரான பூச­கரைச் சந்­தித்து தனக்கு குழந்தைப் பாக்­கியம் இல்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

இதன்பின்னர் அவ­ளது உடம்பில் உள்ள திருஷ்­டியை நீக்­கினால் குழந்தைப் பாக்­கியம் கிடைக்கும் என்­றும், நாகொல்­லா­கொட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனது தேவா­ல­யத்­துக்கு குளித்­து­விட்டு சுத்­த­மாக பூஜைப் பொருட்­க­ளுடன் வரு­மாறும் பூசகர் அப்­பெண்­ணிடம் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த பெண் தனது கண­வ­ருடன் தேவா­ல­யத்­துக்குச் சென்­றுள்­ள­தோடு பூசகர் அப்­பெண்ணின் கண­வரை வெளியே அமரச் செய்­து­விட்டு அவரை மாத்­திரம் தேவா­லய அறை­யினுள் அழைத்துச் சென்று உடம்பில் எண்ணெய் தேய்க்க வேண்டும் எனக் கூறி பெண்ணின் மேலா­டை­களை கழையச் செய்து எண்ணெய் தேய்த்­துள்ளார்.

அதன்பின்னர் பாய் ஒன்றில் அப்­பெண்ணைப் படுக்க வைத்து உடம்பில் ஏனைய பகு­தி­க­ளுக்கும் எண்ணெய் தேய்க்க ஆயத்­த­மாகி தானும் நிர்­வா­ண­மா­னதால் அச்­ச­ம­டைந்த பெண் அங்­கி­ருந்து வெளியே ஓடி­வந்து பிங்­கி­ரிய பொலிஸ் நிலைத்தில் சம்­பவம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து குறித்த தேவா­ல­யத்­திற்கு பொலிஸார் சென்ற போது சந்­தேக நப­ரான பூசாரி அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தோடு பின்னர் மறு­நா­ளான நேற்று முன்­தினம் பொலிஸ் நிலை­யத்தில் அவர் சர­ண­டைந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சந்­தேக நபரை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­து­வ­தற்­காக ஹெட்­டிப்­பொல பொலிஸ் நிலை­யத்தில் பிங்­கி­ரிய பொலி­ஸா­ரினால் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.