வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியை ஒருவர் காணாமல் போன நிலையில் ஒன்றரை மாதங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட் கீரிசுட்டான் பகுதியில் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மிகவும் உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நிஷாந்தன் யாழினி (32) என தெரிய வந்துள்ளது. இவரது மரணம் தொடர்பில் மன்னாரில் கடமை புரியும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று வியாழன் மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் அவரது சடலத்தை ஆடைகள் மற்றும் தடையங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டது.
-மெட்ரோ நியூஸ்-